Guru Vedham

Guru Vedham

Tuesday, October 7, 2014

தேசத்தை சுத்தப்படுத்து…

ராதேக்ருஷ்ணா ...
நீ யோசித்தது போதும்...
உன் மூளைக்கு கொஞ்சம் ஓய்வு கொடு....

நீ பயந்தது போதும்...
உன் தைரியத்திற்கு கொஞ்சம் வேலை கொடு...

உன் வன்முறையை கொஞ்சம் ஓரம் தள்ளி வை...
காந்திஜீயின் அஹிம்சைக்கு கொஞ்சம் இடம் கொடு...

உன் சந்தேகங்களை கொஞ்சம் மூட்டைகட்டி வை...
சரஸ்வதி தேவியின் அருளோடு பாகவதத்தைப் படி...

உன் அழுகையை கொஞ்சம் நிறுத்து...
க்ருஷ்ணனோடு ஆனந்தமாய் கூடியாடி சிரி...

நீ குப்பை போட்டது போதும்...
கொஞ்சம் கொஞ்சமாய் தேசத்தை சுத்தப்படுத்து…



No comments:

Post a Comment