Guru Vedham

Guru Vedham

Thursday, October 16, 2014

தருவாய் ... பெறுவாய் ...


ராதேக்ருஷ்ணா ..

தருவாய் ... பெறுவாய் ...
க்ருஷ்ணனிடம்
கவலையைத் தருவாய்... ஆனந்தம் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
காமத்தைத் தருவாய்...
ப்ரேமையைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
வியாதிகளைத் தருவாய்...
ஆரோக்கியம் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
அவசரத்தைத் தருவாய்...
நிதானத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
அஹம்பாவத்தைத் தருவாய்..
நிம்மதியைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
பயத்தைத் தருவாய்...
தைரியத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
குழப்பத்தைத் தருவாய்...
பக்தியைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
மனதைத் தருவாய்...
த்யானத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
நேரத்தைத் தருவாய்...
நாமஜபத்தைப் பெறுவாய்...
க்ருஷ்ணனிடம்
உன்னைத் தருவாய்...
அவனையே பெறுவாய்….

No comments:

Post a Comment