உடல் ஒரு அறிவில்லாத பொருள். அழியாத ஆத்மாவான நீ உள்ளே இருப்பதால் தான், உடலிள் இருக்கும் கண், காது, மூக்கு, கை, கால் போன்ற எல்லாம் வேலை செய்கிறது. உன் உடல் உனக்கு ஒரு வேலைக்காரரே... நீ தான் உடலின் எஜமானன்...உனக்கு க்ருஷ்ணன் எஜமானன்….
உன் மனதை உன்னால் க்ருஷ்ண பலத்தால் வெல்ல முடியும். உன் மனதை உன்னால் க்ருஷ்ண க்ருபையால் மாற்றமுடியும். உன் மனதை உன் க்ருஷ்ணன் ஒரு நாளும் நொருங்கிப்போக விடமாட்டான்... உன் கண்ணனே உன் மனதை பக்குவப்படுத்துகிறான்…