ராதேக்ருஷ்ணா …
உன் பலம் உனக்குள்ளே என்றும் குறையாமல் இருக்கிறது...உன் பலம் உன்னுள் இருக்கும் அந்தர்யாமியான க்ருஷ்ணனே...
எந்த காரணம் கொண்டும், இந்த பலம் குறையவே குறையாது...
அதனால் எல்லாவற்றையும் சமாளிக்க உன்னால் முடியும்...
உன்னைச்சுற்றி எது நடந்தாலும் உன்னுள் இருக்கும் க்ருஷ்ண பலம் உன்னைக் காக்கும்...
ப்ரஹ்லாதனையும், துருவனையும், மீராவையும் காத்தது அந்த க்ருஷ்ண பலமே...அதே க்ருஷ்ண பலம்தான் உன்னுள்ளும் இருக்கிறது….
No comments:
Post a Comment