Guru Vedham

Guru Vedham

Thursday, September 29, 2016

க்ருஷ்ண அனுக்ரஹம்

க்ருஷ்ணனின் தபால் 
📬
ஒவ்வொரு விஷயத்திலும் க்ருஷ்ண அனுக்ரஹம் பூரணமாய் உள்ளது.
உனக்குப் பிடிக்காத உனக்கு நடக்கும் விஷயங்களில் க்ருஷ்ண க்ருபை ஒளிந்துள்ளது...
அதனால் எந்த ஒரு நிகழ்வையும் பாரமாய் நினைத்து வெறுக்காதே...
உன் வாழ்வை உன்னை விட கண்ணன் அதிகமாகவே நேசிக்கிறான்…

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, September 25, 2016

என்னவேண்டுமானாலும் பேசு!


கண்ணனுக்காக...


📬 க்ருஷ்ணனின் தபால் 
📬
எத்தனையோ பிறவிகள் என்னவென்று தெரியாமல் வீணடித்துவிட்டாய் !
இந்தப் பிறவியை கண்ணனுக்காக வாழ்ந்து விடு !
உனக்கு நடப்பதெல்லாம் கண்ணன் செயலாய் பார் !
மனதினில் ஒரு புதிய உத்சாகமும், தெளிவும் பிறக்கும் !
கண்ணனே உன் வாழ்வை நடத்தட்டும் !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Friday, September 23, 2016

நம்பிக்கையோடிரு !!!

க்ருஷ்ணனின் தபால் 
📬
யாரோ ஏதோ சொன்னார்கள் என்பதற்காக வாழ்வை பாரமாக நினைப்பதோ ?!?
"வருந்தாதே" என்று கண்ணன் சொன்னதும் பொய்யோ ?!?
தாவரங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும், விலங்குகளையும் வாழ வைக்கும் கண்ணன் அல்லவா உன்னை வாழவைக்கிறான் !!!
புலம்பாமல் நம்பிக்கையோடிரு !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, September 19, 2016

"என்னை சரணடை"

📬 க்ருஷ்ணனின் தபால் 
📬
அடுத்தவர் உன்னைப் பற்றி சொன்ன குற்றம் குறையான வார்த்தைகளை மனதில் சுமக்காதே !!!
பகவான் கண்ணன் உனக்காக சொன்ன 
"என்னை சரணடை", " யோகத்தை நலத்தை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்கிற வார்த்தைகளை மட்டும் நினை !!!

கண்ணனின் அழகான இதம் தரும் வார்த்தைகளை விட உயர்ந்தது வேறொன்று உண்டோ ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, September 18, 2016

உன் தகுதி

க்ருஷ்ணனின் தபால் 
📬
உன் தகுதியை தீர்மானிக்க கண்ணனே தீர்மானிக்கிறான் !
நீயோ மற்றவரோ அல்ல !
வாழ்வின் உயர்ந்த தகுதி உன் கண்ணன் உன்னை அனுபவிப்பதே !
அந்தத் தகுதியை அடைய விடாமல் நாம ஜபம் செய் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, September 17, 2016

கண்ணன் ஆசியில் !!!

க்ருஷ்ணனின் தபால் 
📬
உன்னை யாரும் மட்டதட்டவில்லை...
அப்படியே மட்டம் தட்டினாலும், நீ அவர்கள் நினைப்பது போல், சொல்வது போல் மட்டமில்லை !
உன்னை மட்டம் தட்ட இவர்கள் யார் ?!?
கண்ணனே உன் பக்கம் !!!
இவர்களை நம்பி நீயில்லை !!! நிம்மதி கண்ணன் ஆசியில் !!!


குருஜீ கோபாலவல்லிதாசர்

கண்ணனிடம் மட்டுமே !!!

க்ருஷ்ணனின் தபால் 📬
உன்னுடையது என்று நீ எதையெல்லாம் உரிமை கொண்டாடுகிறாயோ,

அவையெல்லாம் உனக்கு துன்பத்தையே தருகின்றன !!!

ஆனால் கண்ணனிடத்தில் உரிமை வைத்தால், நிச்சயமாக துன்பமில்லை, இன்பம் மட்டுமே !!!
உனக்கு உரிமை கண்ணனிடம் மட்டுமே !!!
குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, September 15, 2016

க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு !

 க்ருஷ்ணனின் தபால் 
📬
உன் மனதின் ஆசைகள் சரியோ, தப்போ எல்லாவற்றையும் க்ருஷ்ணனிடம் கொடுத்துவிடு !
தப்பான ஆசைகளை அவன் மாற்றிவிடுவான் !
நியாயமான ஆசைகளை அவன் நடத்திக்காட்டுவான் !
உன் மனதை ஆராய அவனால் மட்டுமே முடியும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, September 13, 2016

தீர்வு உண்டு !

க்ருஷ்ணனின் தபால் 

மனதினால் நாம் பலமானால், எந்த ஒரு நிகழ்வையும் மாற்றமுடியும் !
நாம் எல்லோரும் ஒரே நேரத்தில் மனதினால் பிரார்த்தனை செய்ய உலகை மாற்றிக்காட்டமுடியும் !
மனதினால் ஒன்றுபடுவோம் ! நாம் பகவானின் குழந்தைகள் என்பதை நினைப்போம் !
நிச்சயமாக எல்லா பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வு உண்டு !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, September 11, 2016

பொறுமையாக இரு !

க்ருஷ்ணனின் தபால் 

யாராவது உன்னை ஒதுக்குகிறார்கள் என்று உனக்கு தோன்றுகிறதா ?!?
அவசரப்பட்டு உடனே முடிவெடுக்காதே !

கொஞ்சம் பொறுமையாக இரு ! நிதானத்தை கை விடாதே !
நிறைய நாம ஜபம் செய் !
கண்ணனை நினை !
மனதில் தெளிவும் நிதானமும் வந்த பிறகு எந்த முடிவையும் எடு !


குருஜீ கோபாலவல்லிதாசர்

அது போதும் !

க்ருஷ்ணனின் தபால் 

யாரும் யாரையும் எப்போதும் எல்லா விஷயத்திலும் திருப்திபடுத்தவே முடியாது !
அதனால் உனக்கு வேண்டிய சிலரை திருப்தி செய்யமுடியவில்லை என்றால் வருத்தப்படாதே !
க்ருஷ்ணன் உன்னிடம் திருப்தி அடையும்படியாய் வாழ் ! அது போதும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Saturday, September 10, 2016

கண்ணனிடம் தா !


க்ருஷ்ணனின் தபால் 

உன் மனதை நீ உள்ளபடி அறிந்தால், உன்னால் முடியாதது எதுவுமில்லை !
உன் மனதை நீ அறியாதவரை, அடுத்தவரே உன் வாழ்வை தீர்மானிப்பர் !
உன் மனதை கண்ணனிடம் தா ! அதை உனக்கு அவன் புரியவைப்பான் !
கண்ணனிடம் தந்த மனதை யாரும் ஏமாற்றமுடியாது !

குருஜீ கோபாலவல்லிதாசர்

உன்னோடு வைத்துக்கொள்!


Wednesday, September 7, 2016

ஆனந்தமாய் பழகலாம் !


க்ருஷ்ணனின் தபால் 

எல்லாமே சில காலம் தான் !
அதனால் யார் மீதும் வெறுப்போ, கோபமோ, அருவருப்போ வேண்டாமே !
இருக்கும் வரை எல்லோரிடமும் அன்போடு, நிதானத்தோடு வாழ்வோமே !
க்ருஷ்ணனை நினைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஆனந்தமாய் பழகலாமே !

குருஜீ கோபாலவல்லிதாசர்

எல்லாம் சரியாகும் !

க்ருஷ்ணனின் தபால் 

மனிதரை வெறுக்காதே !
மனிதரை புரிந்துகொள் !

மனிதரிடம் ஜாக்கிரதையாக இரு !
ஆனால் மனிதரை ஒதுக்காதே !

யாரிடம் எத்தனை தூரம் பழகலாம் என்பதை தீர்மானி ! மனதில் மனிதரைக் கட்டிக்கொண்டு பிறகு உன் நேரத்தைத் தொலைத்துவிடாதே !
கண்ணன் உனக்கு நல் வழி காட்டுகிறான் ! எல்லாம் சரியாகும் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, September 6, 2016

அர்ப்பணம் செய்திவிடு !

க்ருஷ்ணனின் தபால் 

நீ யோசிப்பதை விட கண்ணன் கோடி மடங்கு உனக்காக யோசிக்கிறான் !
உன் யோசனைகள் அனைத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்திவிடு !

கண்ணனின் யோசனைப்படி வாழ்க்கை நடக்க ஒத்துக்கொள் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, September 5, 2016

உனக்காக !

க்ருஷ்ணனின் தபால் 

கண்ணனின் அன்பு உனக்காக !
கண்ணனின் கருணை
உனக்காக !
கண்ணனின் அழகு உனக்காக !
கண்ணனின் உதவி உனக்காக !
கண்ணனின் மனது உனக்காக !
கண்ணனின் நேரம் உனக்காக !
கண்ணனே உனக்காக !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Friday, September 2, 2016

உயர்ந்த பரிசு!


க்ருஷ்ண அனுபவம்...


க்ருஷ்ணனின் தபால் 

ஒவ்வொரு நாளும் புதியதே !
ஒவ்வொரு நிமிடமும் புதியதே !
ஒவ்வொரு நிகழ்வும் நன்மையே !
ஒவ்வொரு இரவும் அருளே !
ஒவ்வொரு சுவாசமும் அற்புதமே !
க்ருஷ்ண அனுபவமே வாழ்க்கை !


குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, September 1, 2016

சுகமாய் வாழ்!


 க்ருஷ்ணனின் தபால் 

கண்ணனின் இதயத்தில் நீ வாழ்கிறாய் ! ஒரு நாளும் அவன் உன்னை தன் இதயத்தை விட்டு வெளியே அனுப்பவே மாட்டான் !
மற்றவரைப் பற்றி புலம்புவதை விட்டு, கண்ணனின் இதயத்தில் சுகமாய் வாழ்!

குருஜீ கோபாலவல்லிதாசர்