Guru Vedham

Guru Vedham

Sunday, June 29, 2014

கண்ணன் திருவடியல்லால் கதியல்ல

ராதேக்ருஷ்ணா ...
மின்னுவதெல்லாம் பொன்னல்ல ...
காண்பதெல்லாம் மெய்யல்ல ...
எல்லோரும் கெட்டவரல்ல ...
துன்பமெல்லாம் நிலையல்ல ...
கவலையெல்லாம் அவசியமல்ல ...
வியாதியெல்லாம் விதியல்ல ...
தோல்வியெல்லாம் முடிவல்ல ...
கண்ணன் திருவடியல்லால் கதியல்ல

ராதேக்ருஷ்ணா …

Saturday, June 28, 2014

நம்பிக்கையோடிரு …


ராதேக்ருஷ்ணா ...
நினைப்பது நடக்கவில்லை என்றால் நொந்து போகாதே ...
கண்ணன் ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் அதை நடத்திக்கொடுக்கவில்லை...
நீ கேட்டதை விட, நினைத்ததை விட மிக உயர்ந்த ஒன்றை கண்ணன் உனக்காக தயார் செய்கிறான்...
பொறுமையாக நம்பிக்கையோடிரு 

ராதேக்ருஷ்ணா 

Thursday, June 26, 2014

அபிமானம்

ராதேக்ருஷ்ணா ...
மற்றவரிடம் வைக்கும் அபிமானம் உன்னைப் பாடாய்படுத்தும் ...
க்ருஷ்ணனிடம் வைக்கும் அபிமானம் உன்னை உயர்த்தும் !
உன் அபிமானமே உன் வாழ்க்கையின் சுகத்திற்கும் துக்கத்திற்கும் அஸ்திவாரம் !
புரிந்ததா ???
ராதேக்ருஷ்ணா …

க்ருஷ்ணன் வாழவைப்பான் ...


ராதேக்ருஷ்ணா ...
தவறு செய்யாதவர் எவருமில்லை ...
செய்த தவறையே நினைத்திருந்தால் நிம்மதியில்லை...
எல்லாவற்றையும் க்ருஷ்ணனிடம் உள்ளபடி சொல்லிவிட்டு மனதார மன்னிப்பு கேள்...
க்ருஷ்ணனின் திருவடியைப் பிடித்துக்கொண்டு கதறி அழு...
க்ருஷ்ணன் கருணாசாகரன் ...
மன்னித்து புது வாழ்வு தருவான்...
உன்னை இன்னும் நன்றாக வாழவைப்பான் ...
இது சத்தியம் …

ராதேக்ருஷ்ணா …

Wednesday, June 25, 2014

க்ருஷ்ணனுக்காக வாழ்…


ராதேக்ருஷ்ணா ...
க்ருஷ்ணனிடம் ப்ரேமபக்தி செய்தால் நீயும் கோபி தான் ...
க்ருஷ்ணனுக்கு உன்னிடம் உரிமை வந்தால் நீயும் கோபனே ...
க்ருஷ்ணனுக்காக உருகினால் நீயும் மீராவே ...
க்ருஷ்ணனை நண்பனாய் ஏற்றால் நீயும் அர்ஜுனனே ...
க்ருஷ்ணனோடு நீ வாழ்...
க்ருஷ்ணனுக்காக நீ வாழ்
ராதேக்ருஷ்ணா 

Friday, June 20, 2014

வாழ்க பொறுப்புடன்...

ராதேக்ருஷ்ணா ...

அனாவசியமாக யாரிடமும் பேசாதே...
அடுத்தவர் நேரத்தையும், உன் நேரத்தையும் வீணடிக்காதே...
முடிந்தால் உதவி செய்...
இல்லையென்றால் உபத்திரமாவது செய்யாதிரு ...
கண்ணன் தந்த வாழ்க்கைக்கு மரியாதை தா...
கண்ணன் தரும் நேரத்தை ஒழுங்காக உபயோகித்துக்கொள்...
வாழ்க பொறுப்புடன்...

ராதேக்ருஷ்ணா ...

உனது அஸ்திவாரம் ...

ராதேக்ருஷ்ணா ...

உன்னால் சாதிக்க முடியும்...
க்ருஷ்ணன் உன்னுடைய பலம்...
உன்னால் ஜெயிக்க முடியும் ...
க்ருஷ்ணன் உன்னுடைய நம்பிக்கை ...
உன்னால் மாற்ற முடியும் ...
க்ருஷ்ணன் உனக்கு வழி காட்டுகிறான்...
உன்னால் அடைய முடியும்...
க்ருஷ்ணன் உனது அஸ்திவாரம் ...

ராதேக்ருஷ்ணா ...
 

க்ருஷ்ணனைக் காதலி...

ராதேக்ருஷ்ணா ...

பக்தி செய்...
உன்னால் முடியும்...
நாமஜபம் செய்...
உன்னால் முடியும்...
க்ருஷ்ணனைக் காதலி...
உன்னால் முடியும் ...
க்ருஷ்ணனை அனுபவி...
உன்னால் முடியும்...

ராதேக்ருஷ்ணா ...


Wednesday, June 11, 2014

வாழி.

சடகோபா ... நீ பிறந்ததால் வேதமும் தமிழானது ...
காரிமாறா ... நீ பிறந்ததால் வைணவமும்
வாழ்கிறது ...
வகுளாபரணா ... நீ பிறந்ததால் புளியமரமும் தாயானது ...
நம்மாழ்வார் ... நீ பிறந்ததால் ராமானுஜனும் எமக்குக் கிடைத்தான் ...

வைகாசி வாழி...விசாகம் வாழி...
குருகூர் வாழி...தாமிரபரணி வாழி...
காரி வாழி...உடையநங்கை வாழி...
பக்தி வாழி...திவ்யதேசம் வாழி.


Wednesday, June 4, 2014

அற்புதமாய் வாழ்…


ராதேக்ருஷ்ணா ...
உனக்கு யோசிக்கும் திறனை க்ருஷ்ணன் தந்திருக்கிறான் ... 
அழகாய்,அளவாய் யோசி...
உனக்கு தேவையான சக்தியை க்ருஷ்ணன் கொடுத்திருக்கிறான்...
உன் வாழ்விற்கு உபயோகித்துக்கொள்...
உனக்கு நல்ல தைரியத்தை க்ருஷ்ணன் அளித்திருக்கிறான்...
கஷ்டங்களை,பிரச்சினைகளை சமாளி...
உனக்கு மனித உடலில் வாழ க்ருஷ்ணன் ஆசீர்வதித்திருக்கிறான் ...
அமைதியாய்,அற்புதமாய் வாழ்…

ராதேக்ருஷ்ணா ...