Guru Vedham

Guru Vedham

Sunday, April 23, 2017

உயர்த்திக்கொள் !



📬 *க்ருஷ்ணனின் தபால்* 📬
உன் வாழ்க்கையை வாழ் !
உன் பாதையை கவனி !
உன் வார்த்தைகளை மதி !
உன் நேரத்தை உபயோகி !
உன் செய்கையில் அக்கறை வை !
உன் எண்ணங்களை சீர்படுத்து !
உன் பலவீனங்களை சரி செய் !
உன் பலங்களை செம்மைப்படுத்து !
உன் பிரச்சனைகளில் கவனம் செலுத்து !
உன் ஆரோக்கியத்தை பேணு !
உன் க்ருஷ்ணனை நம்பு !
உன் குரு சொல்படி கேள் !
உன்னை உயர்த்திக்கொள் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Saturday, April 22, 2017

அறுவடை செய் !

க்ருஷ்ணனின் தபால்* 📬
மனமென்னும் வயலை,
குரு என்னும் ஏர்கலப்பையால் நன்றாய் உழு !
க்ருஷ்ண நாமம் என்னும் நீரைப் பாய்ச்சு !
நம்பிக்கை என்னும் விதையை நடு !
பக்தி என்னும் பயிர் தானாய்
செழித்து வளரும் !
கண்ணன் என்னும் ஆனந்தத்தை நன்றாய் அறுவடை செய் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

நம்பு !

*க்ருஷ்ணனின் தபால்* 📬
தெய்வத்தை முழுமையாக நம்பு !
பகவன் நாமத்தை பரிபூரணமாக நம்பு !
குருவை திடமாக நம்பு !
நீ வெல்வது சத்தியம் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

Wednesday, April 19, 2017

இது போதாதோ ?!?


க்ருஷ்ணனின் தபால் 📬

யார் உன்னை எப்படி நினைத்தாலும், நடத்தினாலும்,
உன் கண்ணன் உன்னை
அன்பாகவே நினைக்கிறான் ;
நடத்துகிறான் !
இது போதாதோ ?!?
ஆனந்தமாய் வாழ !!!???

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, April 18, 2017

நன்மை...

க்ருஷ்ணனின் தபால் 📬
நன்மையை நம்புபவர்,
நன்மையை மதிப்பார் !
நன்மையை நினைப்பவர், நன்மையை பெறுவர் !
நன்மையை செய்பவர்,
நன்மையை அடைவர் !
நன்மையை மிஞ்சியது இவ்வுலகில் எதுவுமில்லை !
கண்ணனே நன்மை !
நன்மையே வாழ்க்கை !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, April 17, 2017

என்றும் பொது...



க்ருஷ்ணனின் தபால் 📬
மனிதர்கள் பலவிதம் !
உணர்வுகள் பலவிதம் !
தேவைகள் பலவிதம் !
வாழ்க்கை பலவிதம் !
கலாசாரங்கள் பலவிதம் !
ஆனால் ஒன்றே ஒன்று எல்லோருக்கும் என்றுமே பொதுவே !
அது அந்தர்யாமியான கண்ணனே !

குருஜீ கோபாலவல்லிதாசர்







Sunday, April 16, 2017

அழகான இரவு !


க்ருஷ்ணனின் தபால் 📬

ஒவ்வொரு இரவும், இன்றைய பகலின் முடிவுமட்டுமல்ல !
நாளைய பகலின் தொடக்கமும் கூட!
பல இரவுகள், அழகான க்ருஷ்ணனின் அற்புத அனுக்ரஹமே !
இன்று உனக்கான க்ருஷ்ணனை அனுபவிக்கும் அழகான இரவு !
நன்றாய் கண்ணனை அனுபவித்துக்கொள் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Friday, April 14, 2017

கண்ணனுக்குத் தெரியும் !

 க்ருஷ்ணனின் தபால் 📬
நடந்தது கண்ணனுக்குத் தெரியும் !
அப்புறம் என்ன கவலை !?
உனக்குக் கெடுதலை கண்ணன் செய்வானோ ?!?
நீ நடந்ததில் இருக்கும் நன்மையை மட்டும் பார் !!!
உன் பார்வையை மாற்று !!
கண்ணனின் அடுத்த லீலைக்கு தயாராகு !!!
ஒவ்வொரு சம்பவமும் ஏதோ ஒன்றோடு 
தொடர்புடையது !!!
கண்ணன் என்னும் கள்ளன் உனக்கு நன்மையே
செய்தான் ; செய்கிறான் ; செய்வான் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, April 13, 2017

இது போதாதா….

க்ருஷ்ணனின் தபால் 📬
வாழ்க்கையை பாரமாய் நினைக்காதே !
வாழ்க்கை ஒரு வாய்ப்பு !
வாய்ப்பை முழுதும் உபயோகித்து கொள் !
வாழ்வின் கடைசி நிமிடம் வரை வாய்ப்புகள் உண்டு !
இழந்ததை நினைத்து புலம்பாதே !
இழந்ததால் புரிந்ததை மட்டும் நினை !
கண்ணனை நீ இழக்கவில்லை !
இழக்கவும் முடியாது !
இது போதாதா, தெம்பாய் வாழ ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, April 11, 2017

சீராக்குவான் !

 க்ருஷ்ணனின் தபால் 📬
மனதின் அழுக்கை நீ யாருக்கும் தெரியாமல் மறைக்கலாம் !!!
ஆனால் உனக்குத் தெரியுமே !!
உனக்கு நீ உண்மையாய் இரு !
நாம ஜபத்தினால் மனதை சுத்தம் செய் !
அழுக்கை மற்றவரிடம் காட்டவேண்டாம் !
ஆனால் சுத்தம் செய்து விடு !
கண்ணன் என்னும் வண்ணானுக்கு நாமம் என்னும் கூலி தா !
அவன் உன் மனதை சீராக்குவான் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Monday, April 10, 2017

கோபம் ஏன் ??

📬 க்ருஷ்ணனின் தபால் 📬
மற்றவரிடம் கோபம் ஏன் ??
உன் இயலாமையை ஏன் அடுத்தவர் மீது திணிக்கிறாய் ?!
யாரும் உன் நேரத்தைத் திருட முடியாது !!!
நீ வந்தது நீ வாழவே !!!
வெறுப்பினால் மனதில் மற்றவரை சுமக்காதே !!!
அன்பினால் கண்ணனை சுமப்பாய் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

மனம் போல் வாழ்வு !!!

க்ருஷ்ணனின் தபால் 📬
மனதின் மிகப்பெரிய சக்தி நினைவுகள் !
உன் நினைவில் யார் யார் ?!?
அதைப் பொறுத்தே உன் வாழ்வு !!!
கண்ணனை நினைத்திருந்தால், நீ மீரா !
கண்ணன் நினைவில் வாழ்ந்தால் நீ உத்தவன் !
மனம் போல் வாழ்வு !!!
புரிந்ததா ?!?

குருஜீ கோபாலவல்லிதாசர்

ஆனந்தம் !

*க்ருஷ்ணனின் தபால்* 📬
வாழ்க்கையின் சாரம் ஆனந்தம் !
நன்றாய் யோசி !
உன் ஆனந்தத்தை யாரும் கெடுக்க முடியாது !
உன் ஆனந்தத்தை யாரும் பறிக்க முடியாது !
உன் ஆனந்தத்தின் முதலும் முடிவும் உன் மனமே !
மனதை கண்ணனிடம் தா !
பூரணமாய் தந்து பார் !
எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிப்பாய் !

*குருஜீ கோபாலவல்லிதாசர்*

க்ருஷ்ணனின் சொத்து !

க்ருஷ்ணனின் தபால்📬
நீ எப்போதும் க்ருஷ்ணனின் சொத்து !
சொத்துக்கு உரியவனுக்கு தான் பொறுப்பு அதிகம் !
சொத்துக்கு ஒரு பொறுப்பும் கிடையாது !
சொத்தான உன்னை பத்திரமாய் வைத்துக்கொள்ளாவிட்டால், க்ருஷ்ணனுக்குத்தான் அசிங்கம் !
உனக்கேன் கவலை !

குருஜீ கோபாலவல்லிதாசர்

கண்ணனையே நினை !


க்ருஷ்ணனின் தபால் 📬

உன்னை நினைத்து ஒருவன் பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறான் !
நீ என்னவென்றால் யார் யாரையோ நினைத்துக் கொண்டு, புலம்பிக்கொண்டே இருக்கிறாய் !!!
உன்னையே நினைக்கும் கண்ணனையே நினை !

குருஜீ கோபாலவல்லிதாசர்