Guru Vedham

Guru Vedham

Sunday, November 20, 2016

கண்டுபிடி!


மனம் !

க்ருஷ்ணனின் தபால் 
📬
மனதில் எல்லாவற்றையும் வைத்தால் உனக்கே கஷ்டம் !!!
மனதில் கண்ணனை வைத்தால் உனக்கேது கஷ்டம் !?!
கண்டவரிடம் தருவதற்கல்ல மனம் !
கண்ணனிடம் தரவே மனம் !

குருஜீ கோபாலவல்லிதாசர்

Friday, November 18, 2016

கண்ணனோடு...

க்ருஷ்ணனின் தபால் 
📬
க்ருஷ்ணன் உன்னையே பார்க்கிறான் !
உன்னுள் இருந்து உன்னையே பார்க்கிறான் !
நீயும் அவனையே பார் !
அவனை மட்டுமே பார் !!
உன் வாழ்க்கை கண்ணனோடு வாழவே !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Thursday, November 17, 2016

நிம்மதியாய் இரு !!!!

க்ருஷ்ணனின் தபால் 
📬
எது நடந்தால் என்ன ?
யார் மாறினால் என்ன ?

உன்னோடு கண்ணன் இருக்க, குழம்புவது ஏனோ ?!?
எது உன் கைமீறிப் போனாலும், கண்ணனின் கைமீறிப் போகாதே !!!
கண்ணன் கையில் எல்லாவற்றையும் தந்துவிட்டு, நீ நிம்மதியாய் இரு !!!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

பாக்கியசாலி !!!


க்ருஷ்ணனின் தபால் 📬

உன்னை உலகம் ஒதுக்குகிறதா ?!?

உன்னை உற்றார் கேவலப்படுத்துகிறார்களா ?!?

உனக்கு ஒரு வழியும் தெரியவில்லையா ?!?

நீயே பாக்கியசாலி !!!

கண்ணனை அனுபவிக்கும் முழு தகுதியும் உனக்கு வந்துவிட்டது !!!

குருஜீ கோபாலவல்லிதாசர்

Tuesday, November 15, 2016

புரிந்துகொண்டு நட...

📬 க்ருஷ்ணனின் தபால் 📬
நீ தூங்கும்போதும் உனக்காக க்ருஷ்ணன் திட்டமிடுகிறான்.
நீ முழித்திருக்கும்போது க்ருஷ்ணனின் திட்டங்களைப் புரிந்துகொண்டு நட.
வாழ்க்கையை க்ருஷ்ணன் பார்த்துக்கொள்கிறான்.
நீ அவன் நாமத்தை ஜபித்துக்கொண்டு வாழ், அது போதும்.
குருஜீ கோபாலவல்லிதாசர்

க்ருஷ்ணன் மீது சத்தியம்...

 க்ருஷ்ணனின் தபால் 📬
நீ நினைப்பதெல்லாம் நடக்குமோ இல்லையோ,
க்ருஷ்ணன் உனக்கென நினைத்திருக்கும் எல்லா
நல்லதும் உனக்கு நடந்தே தீரும்...

இது க்ருஷ்ணன் மீது சத்தியம்...
அதனால் வாழ்ந்துவிட்டு போ...
குருஜீ கோபாலவல்லிதாசர்

Sunday, November 13, 2016

வீணடிக்காதே...

க்ருஷ்ணனின் தபால் 📬
ஒவ்வொருவரையும் நம்பி நம்பி சந்தேகப்பட்டு பிறகு புலம்புவதைக் காட்டிலும்,
க்ருஷ்ணனை மட்டும் நம்புவது ரொம்பவும் சுலபம்...

அனாவசியமாக காலத்தையும், சக்தியையும், மனதையும் வீணடிக்காதே...
*குருஜீ கோபாலவல்லிதாசர்*

நானே சர்வம்!


தருவாயா?


Sunday, November 6, 2016

ஆண்டு அனுபவிக்கட்டும்

க்ருஷ்ணனின் தபால் 📬
நீ ஆண்டவனை அனுபவிக்க வந்தாய் !
அவன் உன்னை ஆண்டு அனுபவிக்க வந்தாய் !

எதையெல்லாமோ நீ ஆண்டு அனுபவித்து விட்டாய் !
இனி க்ருஷ்ணனை ஆண்டு அனுபவிப்பாய் !

யாரெல்லாமோ உன்னை ஆண்டு அனுபவித்துவிட்டார் !
இனியாவது க்ருஷ்ணன் மட்டுமே உன்னை ஆண்டு அனுபவிக்கட்டுமே !

குருஜீ கோபாலவல்லிதாசர்