Guru Vedham
Monday, June 29, 2015
Sunday, June 28, 2015
Saturday, June 27, 2015
Friday, June 26, 2015
Thursday, June 25, 2015
Wednesday, June 24, 2015
Tuesday, June 23, 2015
பிடித்துக்கொள்...
ராதேக்ருஷ்ணா…
மனிதர்கள் மாறிக்கொண்டே இருப்பார்... இன்று அன்போடு இருப்பவர், நாளை விரோதியாகலாம்...
நேற்று நம்மிடம் சண்டை போட்டவர், இன்று நம்மை புரிந்துகொள்ளலாம்....
அதனால் மனிதரை வெறுக்கவோ, கொண்டாடவோ அவசியமில்லை....
அவரவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே ஏற்றுக்கொள்....
க்ருஷ்ணன் ஒரு நாளும் மாறுவதேயில்லை....
அவனை பூரணமாய் நம்பு...
அவனைப் பிடித்துக்கொள்…
Monday, June 22, 2015
உன்னோடு இருக்கிறான்…
ராதேக்ருஷ்ணா...
உன்னால் தீர்வு காண முடியும் என்பதால்தான் பிரச்சனைகள் வருகிறது...
உன்னால் ஜெயிக்க முடியும் என்பதால் தான்
கஷ்டங்கள் வருகிறது...
விடாமல் நாம ஜபம் செய்...
ராதேக்ருஷ்ணா…
நீ துருவனாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்....
நீ ப்ரஹ்லாதனாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்....
நீ வேதவ்யாசராக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
நீ யசோதா மாதாவாக வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
நீ கோபியாக
வேண்டுமா???
விடாமல் நாம ஜபம் செய்...
உன் தகுதியை யோசிக்காதே...
உன் பலவீனத்தை யோசிக்காதே....
நாமஜபம் உன் தாய்....
நிச்சயம் அவள் உன்னைக் காப்பாள்....
நாமஜபம் உன்னை க்ருஷ்ணனிடம் அழைத்துச்செல்லும்…
கண்ணனுக்காக வாழ்ந்து வா...
ராதேக்ருஷ்ணா….
உன்னை ஒரு நாளும் கண்ணன் அவமதித்ததில்லை...
உன்னை என்றும் மரியாதையோடு நடத்துபவன் உன் கண்ணனே...
உன் குறைகளை, குற்றங்களை ஒரு நாளும் அடுத்தவரிடத்தில் சொல்லாதவன் உன் கண்ணனே...
அதனால் அவன் உன் வாழ்க்கையை, உன்னை கொண்டாடுகிறான்....
உன் கண்ணனுக்காக வாழ்ந்து வா....உன் வாழ்க்கையின் மஹிமை உனக்குப் புரியும்….
குறையில்லாமல் பார்த்துப்பான்….
ராதேக்ருஷ்ணா...
உன் உடலில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் குடும்பத்தில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் காரியங்களில் குறை இருக்கலாம்...ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்....
உன் புத்தியில் குறை இருக்கலாம்... ஆனால்
உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்...
உன் பக்தியில் குறை இருக்கலாம்... ஆனால் உன்னுள் இருக்கும் க்ருஷ்ணன் பூரணமானவன்...
அவன் உன்னோடுதான் இருப்பான்... இது போதாதா உனக்கு....
அவன் குறைவில்லாதவன்...
உன்னைக் குறையில்லாமல் பார்த்துப்பான்….
Sunday, June 21, 2015
புரியவைக்கிறான்….
ராதேக்ருஷ்ணா...
சில சமயங்களில் நாம் அறியாமல் அஜாக்கிரத்தையாக இருந்துவிடுகிறோம்... அதனால் சில நஷ்டங்களும், கஷ்டங்களும் நம் வாழ்வில் நடப்பதுண்டு... அதற்காக நொந்துபோகாதே... துவண்டுவிடாதே...
வாழ்வில் சில பாடங்கள் இப்படித்தான்... க்ருஷ்ணனை நம்பு... அவன் எல்லாவற்றையும் சரி செய்வான்... மாற்றித்தருவான்...
உன் அனுபவம் உன் க்ருஷ்ணன் தந்ததே... உன்னை உனக்கு அவனே புரியவைக்கிறான்….
Subscribe to:
Posts (Atom)