Guru Vedham
Saturday, December 27, 2014
உனக்காகவே நிற்கிறான்…
ராதேக்ருஷ்ணா …
புண்டலீக வரதா..ஹரி விட்டலா...
விட்டலனைத் தொடுவாய் ...
நீ எந்த ஜாதியாய் இருந்தாலும் விட்டலனைத் தொடலாம் ...
நீ எந்தக் குலமாய் இருந்தாலும் விட்டலனைத் தொடலாம்...
நீ தொட்டால் அவன் சுகப்படுவான்....
வா...ஓடி வா...
உடனே வா...
பண்டரீபுரம் வா...
வா...பரப்ரும்மத்தைத் தொடலாம் வா...
பாண்டுரங்கனைத் தொடலாம் வா...
உனக்காகவே விட்டலன் இடுப்பில் கைவைத்து காத்துக்கொண்டு செங்கல்லின் மீது நிற்கிறான்…
Friday, December 26, 2014
குறையில்லாமல் நடத்துவான்…
ராதேக்ருஷ்ணா …
கண்ணன் உன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு நாளும் குறையப்போவதில்லை.
கண்ணன் உன் மீது வைத்திருக்கும் அன்பு ஒரு நாளும் குறையப்போவதில்லை...
கண்ணன் உனக்கு செய்யும் அருளும் ஒரு நாளும் குறையப்போவதில்லை...
கண்ணனோடு உன் பந்தமும் ஒரு நாளும் அழியப்போவதில்லை...
கண்ணனோ குறை ஒன்றும் இல்லாதவன்...
அதனால் உன் வாழ்வையும் குறையில்லாமல் நடத்துவான்…
Thursday, December 25, 2014
உன் வீடு….
ராதேக்ருஷ்ணா …
கிளம்பத் தயாராயிரு...
பகவான் க்ருஷ்ணன் "இப்பொழுது உடனே வா வைகுந்தம் போகலாம்" என்று சொன்னால் உடனே கிளம்பத் தயாராயிரு....
உன் கடமைகளை சிரத்தையோடு செய்துகொண்டிரு...
ஆனால் வைகுந்தம் செல்ல எப்போதும் தயாராயிரு...
க்ருஷ்ணனைத் தவிர வேறு யார்மீதும் அபிமானம் வேண்டாம்...
வைகுந்தம் உனக்காக ரொம்ப நாளாகக் காத்திருக்கிறது....
வைகுந்தமே உன் வீடு….
விசேஷ அனுக்ரஹம்
ராதேக்ருஷ்ணா …
இப்போது உன் தலை மீது உனக்குப் பிடித்த மஹாத்மாவின் (ஸ்வாமி இராமானுஜர், ஆதிசங்கரர், ஸ்வாமி ராகவேந்திரர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு) கைகள் இருப்பதாக பாவித்துக்கொள்...
இப்பொழுது அழகாக நிதானமாய் நாமஜபம் செய்... பகவான் க்ருஷ்ணன் விசேஷ அனுக்ரஹம் செய்வான்...
வாயினால் நாமத்தைப் பாடி மனதினால் மஹாத்மாவை நினை….
எப்போதும் நீ....
ராதேக்ருஷ்ணா …
க்ருஷ்ணனின் கண் பார்வை எப்போதும் உன் மீது....
க்ருஷ்ணனின் காதுகள் எப்போதும் உன் வார்த்தைக்காக....
க்ருஷ்ணனின் கைகள் எப்போதும் உனக்கு அருள் செய்ய....
க்ருஷ்ணனின் கால்கள் எப்போதும் உனக்காக ஓடி வர...
க்ருஷ்ணனின் மனது என்றும் உன்னிடம் அன்போடு...
க்ருஷ்ணனின் சிந்தனையில் என்றும் எப்போதும் நீ….
Saturday, December 13, 2014
கவலைப்படாதே....
ராதேக்ருஷ்ணா …
சில சந்தர்ப்பங்களில் நீ செய்யும் நல்ல விஷயங்களை எல்லாம் சிலர் தான் செய்தது போல் உலகத்திற்கு சொல்லி வீண் பெருமை அடைவார்கள்... கவலைப்படாதே....
க்ருஷ்ணன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான்...
காலத்தே அவன், உன் உழைப்பை, நீ செய்த நல்லதை உலகிற்கு நிச்சயம் தெரிவிப்பான்....இது அவன் மீது சத்தியம்…
திருவாளன்
ராதேக்ருஷ்ணா …
இன்று நம் பாரதியாரின் பிறந்தநாள்....
முறுக்கு மீசை கவிஞன்....
முண்டாசு கட்டிய புலவன்...
பாரதத்தாய் பெற்ற வீரன்...
கண்ணனையும் சேவகனாய் பார்த்த பக்தன்...
தீராத சுதந்திரதாகப் பிரியன்...
ஜாதியை எதிர்த்த பிராம்மணன்....
பெண் விடுதலையைப் பேசிய பெரியவன்...
தன் வீட்டை மறந்து நாட்டை நேசித்த நல்லவன்....
க்ருஷ்ண க்ருபை
ராதேக்ருஷ்ணா …
உன்னுடைய பேச்சு அல்லது செயல்கள் முட்டாள்தனமானது என்று பலரும் கிண்டல் செய்தாலும், நீ பேசாமல், செய்யாமல் இருக்காதே...யாரும் உலகில் பிறவி மேதாவிகள் இல்லை...க்ருஷ்ணன் உனக்கும் யோசிக்கும் திறனை தந்திருக்கிறான்....
கற்றுக்கொள்... உன்னால் முடியும் நம்பு...
உன் விடாமுயற்சியும், க்ருஷ்ண க்ருபையும் நிச்சயமாக உன்னை மாற்றித்தரும்….
மாற்றிக்கொள் ....
ராதேக்ருஷ்ணா ....
உன்னை மாற்றிக்கொள் ....
வரட்டுப் பிடிவாதம் வேண்டாம்....
க்ருஷ்ணன் நல்லதே செய்கிறான்...
குருஜீ கோபாலவல்லி தாசரின் 1 நிமிட சத்சங்கம் கேளுங்கள். ...
Radhekrishna. ....
Be flexible. ...
River is bending & flowing ....
Give up your adamant nature...
1 minute sathsangam in tamil by GURUJI GOPALAVALLIDASAR. ..
Click this link to listen
அழகாகக் காக்கிறான் ....
ராதேக்ருஷ்ணா ....
நீ பசிக்கு ஆகாரம் சாப்பிடுகிறாய்....
ஆனால் நீ சாப்பிடும் ஆகாரத்திலிருந்து கண்ணிற்கு பார்க்கும் சக்தியையும், காதுக்கு கேட்கும் சக்தியையும், கைகளுக்கு வேலை செய்யும் சக்தியையும், கால்களுக்கு நடக்கும் சக்தியையும் தந்து உன் உடலைக் காக்கும் க்ருஷ்ணன், உன் வாழ்க்கையையும் அதுபோல் அழகாகக் காக்கிறான் ....
குருஜீ கோபாலவல்லி தாசரின் 1 நிமிட சத்சங்கம் கேளுங்கள். ...
Radhekrishna. ....
Krishna is supplying the required energy to your body parts from your food....
He is so much caring about your body....
Sameway He is caring for your life too...
1 minute sathsangam in tamil by GURUJI GOPALAVALLIDASAR. ..
Click this link to listen
Subscribe to:
Posts (Atom)