ராதேக்ருஷ்ணா…
நீ எந்த ஒரு சமயத்திலும், பக்தி விஷயத்தில், உன் வழி அல்லது முறை அல்லது சம்பிரதாயம் தான் சிறந்தது என்று யாரிடமும் வாதிடாதே....
வாத விவாதங்கள் பல சந்தர்ப்பங்களில், மனதில் வெறுப்பையும், கோபத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறது....
அதை விட க்ருஷ்ணனை அனுபவிப்பது மிக முக்கியம்...
அவரவருக்கு தன்னைப் பற்றிய அறிவை கண்ணனே தகுந்த காலத்தில் கட்டாயம் தருவான்... நீயும் அப்படித்தானே பக்தி செய்ய ஆரம்பித்தாய்...
அவனருளே உனக்கும், எனக்கும், யாவருக்கும் பக்தியைத் தருகிறது…
No comments:
Post a Comment