Guru Vedham

Guru Vedham

Sunday, May 25, 2014

வீணடித்துவிடாதே...…


ராதேக்ருஷ்ணா ...

அன்புடன் இரு.
ஆனால் அதற்காக எடுப்பார் கைப்பிள்ளையாய் ஆகிவிடாதே...
உதவி செய்.
ஆனால் அதற்காக உன் வாழ்க்கையை இழந்துவிடாதே...
கருணையோடு இரு.
ஆனால் அதற்காக உன் சுயமரியாதையை விட்டுவிடாதே...
பொறுமையாக இரு.
ஆனால் அதற்காக உன் உரிமையை விட்டுக்கொடுக்காதே...

நீ, உன் உடல், உன் நேரம், உன் பலம்,
உன் சொத்து,உன் அறிவு,உன் வாழ்க்கை ...

இவை எல்லாம் க்ருஷ்ணன் உனக்குத் தந்த வரம்......வீணடித்துவிடாதே...…


ராதேக்ருஷ்ணா …


No comments:

Post a Comment