ராதேக்ருஷ்ணா …
க்ருஷ்ணன் பூமியாக இருந்து உன்னைத் தாங்குகிறான்....
க்ருஷ்ணன் சூரியனாக இருந்து உனக்கு வெளிச்சம் தருகிறான்....
க்ருஷ்ணன் காற்றாக உனக்குள் நுழைகிறான்...
க்ருஷ்ணன் ஆகாரமாக இருந்து உனக்கு பலம் தருகிறான்...
க்ருஷ்ணன் வஸ்திரமாக இருந்து உன் மானத்தைக் காக்கிறான்...
இப்படி பலவிதத்தில் க்ருஷ்ணன் உன்னோடு இரண்டறக் கலந்திருக்கிறான்...
ஆண்டாள் சொன்னது போல "உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது"...
என்று க்ருஷ்ணனோடு நம் பந்தம் நிரந்தரம்...
அதனால் கவலையோ, பயமோ, குழப்பமோ, வெறுப்போ, ஏமாற்றமோ வேண்டாம்...
க்ருஷ்ணன் உன்னை விட்டு ஒதுங்குவதுமில்லை. உன்னை ஒதுக்குவதுமில்லை...அதனால் குழந்தை போல குதூகலமாய் சந்தோஷமாய் இரு….
No comments:
Post a Comment